2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

க. அகரன்   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா கள்ளிக்குளம் கிராம மக்கள் இன்று (13) காலை வவுனியா மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு மாவட்டச் செயலரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

வவுனியா கள்ளிக்குளம் கிராமத்தில் நீண்டகாலமாக குடியேறியுள்ள மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு கடந்த 2011ஆம் ஆண்டு அங்கு குடியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கான வீட்டுத்திட்டம் காணி ஆவணங்கள் என்பன வழங்கப்படவில்லை.

அண்மையில் மாவட்டச் செயலரிடம் தனி நபர் ஒருவர் அப்பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதனை மீள்பரிசீலனை செய்யுமாறும் மேலும் அங்குள்ள மக்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பிரயோகித்து அரச அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அக்கடிதம் பிரதேச செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்டச் செயலரால் பணிக்கப்பட்டுள்ளதுடன் இவ்விடயம் கிராம அலுவலகரூடாக கிராம அபிவிருத்திச்சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்தே அப்பகுதி மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் அரசாங்க அதிபர் நேரடியாக தமது பகுதிக்கு வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்து மக்களுக்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரி அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து கடிதத்தினை வழங்கியுள்ளனர்.

கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மாவட்டச் செயலர் தற்போது வழங்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் குறித்து ஒரு முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் மாவட்ட மட்டத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வீட்டுத்திட்டங்களை வழங்க பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரதேச செயலாளருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட செலயகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கிருந்து அகன்று சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .