2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’வவுனியாவுக்கு பிசிஆர் பரிசோதனை இயந்திரம் கிடைக்கும்’

Niroshini   / 2021 ஜூன் 22 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

வவுனியாவுக்கு, பிசிஆர் இயந்திரம் விரைவில் கிடைக்குமென, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இன்று (22), பாராளுமன்றில் வைத்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியை சந்தித்து, பிசிஆர் இயந்திரத்தின் அவசர தேவையை எடுத்தரைத்ததாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, விரைவில் வவுனியாவுக்கு பிசிஆர் இயந்திரத்தை வழங்குமாறு பணிப்புரை வழங்கினார் என்றும், திலீபன் எம்.பி தெரிவித்தார்.

அதேசமயம், எதிர்வரும் மாதம் கட்டாயம் பிசிஆர் இயந்திரத்தை வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்தாரென்றும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .