2025 ஜூன் 07, சனிக்கிழமை

அமிர்த மழை...

Princiya Dixci   / 2016 ஜூன் 06 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வானத்திலிருந்து விழும் அமிர்தம் மழை. இதுவே உலகத்தைக் குளிரூட்டிக் குளிக்க வைத்துக் களிப்பூட்டும் உயிரூட்டி.

மழையில் மாந்தர் நனைவது என்பது, இறைவனே நேரில் நின்று அருள் மழை சொரிவது தான். மழையும் வெயிலும் உலகத்தில் புது உயிர்களைப் பிறப்பிக்கின்றன. வாழ்கின்ற சகல உயிர்களையும் வளப்படுத்துகின்றது.

மழை எழிலானது, கோபம் கொண்டால் வலிமை கொடுமை. எனினும், இயற்கையை ஏற்க மனிதர் தயாராகவில்லை.

சாமானிய மனிதனின் கோபமே பார்க்கச் சகிக்காது. பாவங்களின் தொகுப்பாக தண்டனைகளை இயற்கை வழங்கும்போது, கொதிப்படைந்து வெறுத்துப்போகின்றான்.

மழையை, அது தரும் குளிரை வெயிலின் உஷ்ணத்தை இரசிக்கப் பழகுங்கள் மானுடர்களே.

பனிப்பாறைகள் சூழ்ந்த பிரதேசங்களிலும் உஷ்ணத்தின் உச்சத்தில் உள்ள பாலைவனத்தில் வாழும் மக்களே மகிழ்வுடன் வாழும்போது இந்த வளம் பொருந்திய நாட்டில் என்ன குறை வந்துவிட்டது?

இரசனையற்றவர்களுக்குச் சொர்க்கமும் நரகம் தான்.

வாழ்வியல் தரிசனம் 06/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .