2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அறிவை உயிரோடு கலக்கவைக்கும் வித்தை ஞானமுள்ள பேச்சு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெரியும் என்பது போல் சொற்பொழிவாளர்கள் மேடையில் முழங்கக் கூடாது. அரசியல்வாதிகள் உண்மையைப் புட்டுப்போட எத்தனிக்கும்போது, பொய்யான தரவுகளை முன்வைப்பார்கள். இதனை மக்கள் துரதிஷ்டமாக நம்புவதுண்டு.   

தங்கள் பேச்சு வன்மையினால் மக்களின் மூளையினை திசைதிருப்ப எத்தனிப்போர் முடிவில் தங்கள் சுய உருவத்தினைத் தங்கள் அடாத செயல்களினால் வெளிப்படுத்தி விடுகின்றார்கள்.   

என்றுமே மக்களுக்கு ஒன்றுமே தெரியாது என பேச்சாளர்கள் எண்ணிக்கொண்டு பேசுதல் ஆகாது. தங்களை மேலானவர்களாகக் காட்டினால் அது மக்களுக்குப் பிடிக்காது. முதற்கண் இத்தகையோர் உணரவேண்டும்.   

சொல்லில் சுருக்கமும் அர்த்தத்தில் விரிவும் கேட்பதில் இனிமையும் இருந்தால் பேசும் விடயம் கல்லில் எழுதிய வரிகள்போல் ஸ்திரமாகிவிடும். மக்களின் அறிவை உயிரோடு கலக்கவைக்கும் வித்தையை ஞானமுள்ள பேச்சாளர்களால்த்தான் உருவாக்க முடியும்.   

வாழ்வியல் தரிசனம் 04/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .