Princiya Dixci / 2016 ஜூலை 29 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
செருக்குடன் சனங்களை நோக்குபவர்களை விருப்பத்துடன் எவருமே நெருங்க மாட்டார்கள்.
ஆற்றல்கள், வலிமை, செல்வம் இவற்றுடன் அறிவாளியாக இருப்பவர்கள் கூட செருக்குடன் உலா வருகின்றார்ககள்.
செருக்குடையவர்கள் தங்களைத் தாங்களே தரக்குறைவாக நடத்துபவர்கள் ஆவார். ஆனால், துஷ்டர்கள்முன் தன்னை நிலைநிறுத்தும் வீரன் செருக்குடன் அவர்களை அடக்கி ஒடுக்குதல் தவறு அல்ல.
எல்லாச் சமயங்களிலும் அநியாயம், அட்டகாசம் செய்பவர்கள் முன் பணிவுடன் பேசமுடியாது. பணிவை இத்தகையோர் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
எத்தகைய உயர் பதவிகளை வகிப்பவர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட எத்தரத்தில், மேம்பட்ட நிலையில் உள்ளவர்கள் கூட செருக்குடன் மக்கள் முன் நிற்கமுடியாது.
பதவிக்குரிய ஆளுமையுள்ளவர்கள் பணிவுடனேயே பழகுவார்கள். உள்ளம் விரிந்தால் செருக்கு சுருங்கி ஒடுங்கும்.
வாழ்வியல் தரிசனம் 29/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
12 minute ago
19 minute ago
32 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
32 minute ago
41 minute ago