2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

உழைப்பவனுக்கு நாம் அளிக்கும் கௌரவம்?

Editorial   / 2018 ஜனவரி 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நன்றாக உழைப்பவனுக்கு தேகம் மட்டும் வலுவடையாது;

அவனது எண்ணங்கள், செய்கருமங்கள் என அனைத்துமே அவனது ஆளுமையை மெருகேற்றும்.

நான் எதனையும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவன்.

 பிறரை நம்பிக்கையேந்துபவன் அல்லன்.

எவருக்கும் அடிபணியாத சுதந்திர வாசி.

என்னையும் என் குடும்பத்தையும் என்னைச் சார்ந்தவர்களையும் ஆதரிக்கும் மனத்திண்மையுண்டு.

எனது பலம் என்னாலே உருவானது.

நம்பிக்கை சுயமரியாதை எனக்கு நிரம்பவே உண்டு.

உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதி ஒருவனின் தீர்க்கமான உரை இது.

ஆனால், உழைக்காமல் சுரண்டி வாழும் ஒருவன் என்னதான் வாய்ப்பந்தல் போட்டாலும் சமூகம் அவனை எள்ளி நகையாடும்.

உழைப்பவனுக்கு நாம் அளிக்கும் கௌரவம், அவன் செயலுக்கும் சுயத்துக்குமான அன்பளிப்புத்தான். 

வாழ்வியல் தரிசனம் 05/01/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X