Princiya Dixci / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசுவின் பார்வையினை சற்று உற்று நோக்குங்கள்.அதில் ஒரு கனிவும் அமைதியும் தெரியும். பசு இயல்பாகவே சாதுவானது; அன்னைக்கு நிகரானது. எனவே, அதனிடத்தில் பாசம், கனிவு, அன்பு என்பவை இருப்பதில் வியப்பில்லை.
பட்சிகளைக் கவனியுங்கள்‚ அவை எப்போதுமே துறுதுறுவெனத் தமது இறகுகளை அடித்து, வான் பரப்புகளை சதா அளவிடும். அவற்றின் விழிகளும் துறுதுறுத்த படியே காணப்படும்.
நாங்களும் எவரிடத்திலும் வெறுப்பை உமிழ்ந்தால் எமது பார்வையும் வேறுபடும். அங்கே கனிவு சிறிதளவும் தென்படாது. எங்கள் எண்ணங்களுக்கு ஏற்பவே பார்வைகளும் மாறுபடும்.
மனதைத் தெளிவுடனும் அன்புணர்வுடனும் வைத்திருத்தலே சாலச்சிறந்தது. மனம் மரத்தால் பிறர் எம்மை மறுத்து ஒதுக்குவர். சந்தோசத்தைச் சதா எமக்குள் இருத்தினால் குறைந்தா போய்விடுவோம்? பார்வைகளைப் பசுமையாக வைத்திருப்போம்.
வாழ்வியல் தரிசனம் 09/09/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago