Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிகாலையில் படிக்க வேண்டும் என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு.
பிற ஒலி, ஓசைகள் எங்கள் மூளையில் பதிய நேரிட்டால் அது கல்வி கற்பதற்கு இடையூறாக அமையும்.
மேலும், ஒருவர் இரவு நேரத்தில் ஓய்வாக நித்திரை செய்து, அதிகாலையில் எழுந்திருக்கும்போது மூளை புத்துணர்ச்சியுடன் எதுவித சலனமும் இல்லாமல் இருக்கும்.
எனவே, புதிதாக எந்த விடயத்தினையும் படிக்கும்போது, அதனை அதிகாலையில் படித்தால் அது சிக்கென மூளையில் பதிவேற்றம் பெற்றுவிடும்.
ஏகாந்தமான சூழலில்த்தான் மேதைகள், ஞானிகள் பல விடயங்களைக் கண்டு உணர்ந்தார்கள்.
அதிகாலையில் எழுந்திருப்பது சிரமமாகச் சிலருக்கு இருக்கலாம். சோம்பலை விட்டொழித்து துயில் நீத்தால், காலக்கிரமத்தில் அதுவே நல்ல பழக்கமாகி விடும். கற்றலும் சிரமமின்றி நடந்தேறிவிடும்.
எழுந்திருப்பதற்கு மறுத்தால், வாழ்க்கை ஒழுங்கே வீழ்ந்துவிடும். எழுக விழிப்புடன்‚
வாழ்வியல் தரிசனம் 25/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
5 hours ago
9 hours ago
07 Jun 2025