2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

ஓடுவதனால் பிரச்சினைகள் ஒழிவதில்லை

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கங்கள் சில ஒன்று சேர்ந்து காட்டு எருமைகளைத் தாக்க வருகின்றன. உடனே காட்டு எருமைகள் ஒன்றிணைந்து சிங்கங்களைச் சுற்றி வளைக்கின்றன. அவ்வளவுதான் இது சரிப்படாது என எண்ணிக்கொண்டு சிங்கக் கூட்டம் அனைத்தும் புறமுதுகிட்டு ஓட்டமெடுத்த (மனிதர்போல்) காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். துணிச்சலுடன், இன ஒற்றுமையையும் இவை புலப்படுத்தின.

'எவரேயாயினும் தாக்க வந்தால் ஓடாதே, திருப்பித் தாக்கு' எனும் எண்ணம் உருவாகாது விட்டால் மடிவது நிச்சயம் என விலங்குகளே மெய்ப்பிக்கின்றன.

தாக்க வந்த பெரிய முதலையை நீர் யானை பந்தாடும் காட்சி, மெய்சிலிர்க்க வைத்தது.

ஒளிந்து ஓடுவதனால் பிரச்சினைகள் ஒழிவதில்லை. அதனை எதிர் கொண்டால், அவை மறைந்துவிடும். நியாயபூர்வமான விடயங்களுக்குத் துணிந்து போராடினால் சத்தியம் உங்களோடு நிற்கும்.

வாழ்வியல் தரிசனம் 06/09/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .