Editorial / 2017 டிசெம்பர் 06 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களுக்குத் தாங்களே பொய்யுரைப்பதில் பலர் சமர்த்தர்களாக இருப்பதுண்டு.
பாரதூரமான தவறுகளைச் செய்துவிட்டு, ‘நான் செய்தது சரிதான்’ எனத் தமக்குத்தாமே சொல்வது, எவ்வளவு தரக்குறைவானது என்பதை ஏன்தான் உணராமல் இருக்கிறார்கள்?
ஒருவர் தனக்குத்தானே வஞ்சனை செய்வது, பொய்மையின் உச்சக்கட்டமாகும். தங்கள் வசதிக்காக, எப்படியும் நியாயத்தைப் புரட்ட எத்தனிக்க முடியாது.
இன்னும் சிலர், தாங்களே துஷ்டகுணங்களின் சொந்தக்காரர்கள் என்று சொல்வதில்கூடச் சந்தோசப்படுகின்றார்கள். இது கடவுளுக்குச் சவால் விடுவதுபோலாகும்.
இன்று கதாநாயகர்களை விட, வில்லன்களின் அங்க அசைவுகளை, நடத்தைகளையே விரும்பி ஏற்கும் இளைஞர்கள் பலருண்டு.
வாழ்க்கையின் தாற்பரியத்தைப் புரியாமல் வாழ்ந்தால், அசுத்த மனத்துடன் துன்பப்படவேண்டியதே!
வாழ்வியல் தரிசனம் 06/12/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
14 minute ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago
7 hours ago