Editorial / 2017 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வர்ணங்கள் பலவிதம்; அவ்வாறே ஸ்பரிசங்களும் பலவிதமானது. தாய், பிள்ளைகளை ஸ்பரிசிப்பது, நண்பர்கள் ஒருவரை ஒருவர் தழுவுவது, காதலர் தொடுகை எனப் பலவுண்டு.
அவ்வண்ணமே, மணம், சுவை, இசை வடிவங்களிலும் பலவகையுண்டு. நல்ல நறுமணம், துர்நாற்றம் என்பதுபோல், சுவைகளில் அறுசுவை என்ற வகைகள் உண்டு. மனதை மயக்கும் இசைகளோ பற்பலவிதம். எண்ணிலடங்காத இசைகளை நாம் கேட்டு மகிழ்கின்றோம்.
இவை எல்லாமே நாங்கள், எங்கள் இரசனைக்கு ஏற்றபடி பார்க்கின்றோம்; உணர்கின்றோம்.
இயற்கை எமக்குத்தந்த படைப்புகளில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். எங்கள் இதயத்துக்கு அமைதிதேட, வர்ணஜாலங்களை, நல்ல மனித உறவுகளை, மரம், செடிகொடி படைப்புகளை, இசையின் அற்புத சக்தியென இரம்மியமான விடயங்களை மட்டும் நுகர்ந்து மகிழ்வோம். ஜடவாழ்வுக்கு இடமளிக்க வேண்டாம்.
வாழ்வியல் தரிசனம் 11/08/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
6 minute ago
8 hours ago
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 hours ago
08 Feb 2026