2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நீயா? அல்லது நானா?

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓர் அற்ப விடயத்திற்காகப் பிறருடன் சவால் விடுவது வேடிக்கையான போக்குத்தான். அரசாங்கம் ஒரு கொள்கையைப் பிரகடனம் செய்வதுபோல், பலருக்கும் சத்தமிட்டுச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.

ஒருவர் மீதுள்ள கோபத்தினாலேயே சத்தமிடுவதும், நீயா? அல்லது நானா? என்று சொல்லித் தங்கள் சவாலைப் பிரகடனப்படுத்தித் திருப்தியடைகின்றார்கள்.

தமக்கு, அநாசயமாகப் பிறர் துன்பத்தை ஏற்படுத்தும்போது, எவராயினும் மனதளவில் பாதிப்புக்குள்ளாவது இயற்கைதான். எனினும் கூடியவரை உணர்ச்சிவசப்படாது நேய மனப்பாண்மையுடன் எவரையும் மன்னிப்பது தெய்வீகப் பண்பாகும்.

எவரது கோபம் நியாயமற்றதோ, அதனை உதாசீனம் செய்து பாராமுகமாக இருப்பதே எமக்கான பலமாகும்.

வாழ்வியல் தரிசனம் 02/09/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .