Editorial / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த உடல் உங்களிடமே இருக்கின்றது. இந்த மனம் கூட உங்களுடன் சதா இயங்கியபடி உள்ளது.
அப்படியிருக்க இந்த உயிரோடு கூடிய உடலையும், மனதையும் உங்கள் வசம் கட்டிப்போட்டு வைக்க ஏன் முடியாதுள்ளது.
மனம் வழி செல்கிறீர்கள்; தேகம் கேட்பதையெல்லாம் வழங்கியபடியே இருக்கின்றீர்கள். அப்புறம் இதனால் வரும் துன்பங்களையும் அனுபவித்தபடியே இருக்கின்றீர்கள். வெட்கமாய் இல்லையா உங்களுக்கு?
கெட்டவைகளை வெட்ட இயலவில்லை. தவறு எனத்தெரிந்து, அதையே செய்யப் புகுவது, பொருந்தாத உணவுகளைப் புசிப்து, வசதிக்கு மீறி ஆசைப்படுவது, எல்லாமே உடம்பு தேடும் பொல்லா வினைகள் அல்லவா? இவைகூட ஒரு போதை நிலைதான். மனதை உங்கள் அறிவுக்குள் ஆக்கிரமித்து வையுங்கள்.
வாழ்வியல் தரிசனம் 12/10/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025