2025 ஜூன் 07, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 18/05/2016

Princiya Dixci   / 2016 மே 18 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாசுக்காக, கடமையிலிருந்து நழுவிக் கொள்பவர்களும் நல்ல பெயர் எடுப்பதுண்டு. கடமை செய்வதில் தேக சுகம் பார்க்காமல் உழைப்பவர்கள், கண்டுகொள்ளப்படாமலும் இருப்பதுண்டு. அரச, தனியார் நிறுவனங்களில் இந்நிலை உண்டு.

நடித்து வாழ்பவர்களுக்கே நல்லபெயர் கிடைப்பதாகப் பலர் விசனப்படுவதை நாம் கண்டிருக்கிறோம். தனது பணியில் சிரத்தையில்லாதவர்களுக்கு இறைவன் கருணை எப்படிக் கிடைக்கும். உழைப்பு என்பது, எமக்கானது என்பது மட்டுமல்ல என்பதை இத்தகையோர் உணர்ந்தால், இப்படியாக நடந்துகொள்வார்களா?

கஷ்டப்பட்டு வேலை செய்வது தேகத்துக்கு ஆகாது எனச் சிலர் தப்புக்கணக்குப் போடுகின்றனர்.

மனநிறைவுடன், தரப்பட்ட பணியை நிறைவாகச் செய்தால், தேகம் சௌக்கியமாகும். இது விடயத்தில், மிகையாக உடலை வதைப்பதும் ஆகாது.

பணிகளைச் செய்பவன் பிணியாளனாகக் கூடாது.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .