2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

மார்பகங்களை அகற்றிய ஏஞ்சலினா ஜூலி

Menaka Mookandi   / 2013 மே 15 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி, அறுவை சிகிச்சை மூலம் தனது மார்பகங்களை அகற்றியுள்ளார்.

மார்பகப் புற்று நோயிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே இவர் தனது மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார் என்று வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏஞ்சலினா ஜூலியின் தாயார் மார்ஷலின் பெட்ரான்ட், தனது 56ஆவது வயதில் கர்ப்பப்பை புற்றுநோயால் மரணமடைந்தார்.

இந்நிலையில், ஜூலிக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட 87 சதவீத வாய்ப்பு உள்ளதாகவும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட 50 சதவீத வாய்ப்பு உள்ளதாக வைத்தியர்கள் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், தனக்கு ஏற்படவுள்ள புற்றுநோயைத் தடுப்பதற்காக கலிபோர்னியாவிலுள்ள பிங்க் லோட்டஸ் பிரஸ்ட் சென்டரில் அறுவை சிகிச்சை மூலம் மார்பகங்களை அகற்றியுள்ளார் ஏஞ்சலினா ஜூலி.

ஏஞ்சலினா ஜூலி அவரது நடிப்பு தவிர பெரிய உதடுகளுக்கு பெயர் போனவர். அவர் ஹொலிவூட் நடிகர் பிராட் பிட்டுடன் திருமணமாகமலேயே சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

அவர்களுக்கு தத்துப் பிள்ளைகள் மூவரும், அவர்கள் பெற்ற குழந்தைகள் மூவருமாக ஆறு பேர் உள்ளனர்.

குழந்தைகளின் வலிறுத்தலால் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இந்நிலையிலேயே ஜூலிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X