2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

கர்ப்பப்பையையும் எடுக்கிறார் ஏஞ்செலீனா ஜூலி

Kogilavani   / 2013 ஜூன் 06 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்பக புற்றுநோய் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக தனது இரு மார்பகங்களையும் அகற்றிய ஹொலிவுட் நடிகை ஏஞ்செலீனா ஜூலி தனது கர்பப்பையையும் அகற்ற உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது 38 ஆவது பிறந்த தினத்தை நேற்று முன்தினம் கொண்டாடிய ஏஞ்செலீனா ஜூலி (வயது 37) அண்மையில், தனது இரு மார்பகங்களையும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆறு பிள்ளைகளின் தாயான இவர் தற்போது, தனது கர்ப்பப்பையையும் எடுப்பதற்கு முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏஞ்செலீனா ஜூலிக்கு, கர்ப்பப்பையில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 50 வீதம் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே அவர்  இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என உள்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X