2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

2013இன் 100 பிரபலங்கள்; மலாலாவின் பெயரும் உள்ளடக்கம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 19 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


2013ஆம் ஆண்டின் பிரபலங்கள் நூறு பேருடைய பெயர்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது 'டைம்' சஞ்சிகை. இந்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி, பாகிஸ்தான் மாணவி மலாலா, பொலிவூட் நடிகர் அமீர்கான் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

ஒபாமாவுக்கு 8ஆவது இடம்
'டைம்' வெளியிட்டுள்ள இந்த பிரபலங்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு 8ஆவது கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் இந்த முறை அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

பாகிஸ்தானின் மலாலா
பெண்களின் கல்விக்காக போரடி தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்த பாகிஸ்தான் மாணவி மலாலாவின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஜெனிபர் லோரன்ஸ்
அமெரிக்காவின் புகழ்பெற்ற ரப் பாடகர் ஜெய் ஜீ துயல-ணு, ஒஸ்கார் விருது வென்ற ஹொலிவூட் நடிகை ஜெனிபர் லோரன்ஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளர் இலான் முஸ்க் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

போப் பாண்டவர்
போப் பாண்டவர், பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோரும் முக்கிய நபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் ஆவர்.

ப.சிதம்பரத்தின் சாதனை
பொதுவாக இந்திய அரசியல்வாதிகள் என்றால் ஊழல்வாதிகள் என்ற கண்ணோட்டம் மட்டுமே நிலவுகின்ற நிலையில், 67 வயதான ப.சிதம்பரம் தனது அலுவலகத்தில் நேர மேலாண்மையை திறம்பட அறிமுகப்படுத்தியுள்ளார் என்று 'டைம்' சஞ்சிகை புகழ்ந்துள்ளது. இதற்காகவே 100பேர் பட்டியலில் ப.சிதம்பரமும் இடம்பெற்றுள்ளார்.

அமீர்கானுக்கு சிறப்பு
தொலைக்காட்சியில் அமீர்கான் தொகுத்து வழங்கிய 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சிதான் அவரது பல்வேறு புகழுக்கும் காரணமாக அமைந்துள்ளது. இதுவே நூறு பிரபலங்கள் பட்டியலில் அவரையும் இடம்பெற வைத்துள்ளது.

அமீர்கான் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்
அமீர்கான் குறித்து ஒஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்தையும் 'டைம்' சஞ்சிகை வெளியிட்டுள்ளது. நல்ல சமூக அக்கறையுள்ள திரைப்படங்களை கொடுப்பதில் அமீர்கானுக்கு இணையாக இந்தியாவில் யாரும் இல்லை என்றும் அவருடை தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சத்யமேவ ஜெயதே' மக்களிடம் மிகுந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .