2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் திரைப்பட நடிகர் ஏ.சி முரளிமோகன் தற்கொலை

Kogilavani   / 2014 ஜூன் 26 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஹார்லிக்ஸ் மாமா' என பலராலும் அறியப்பட்ட பிரபல தொலைக்காட்சி மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் ஏ.சி முரளிமோகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலமுரளி மோகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தனது 54 ஆவது வயதில் உயிரழந்துள்ளார். புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 

இவர், வம்சம், தென்றல் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் இருவர், சிட்டிசன், தில், பாய்ஸ், ரெண்டு உட்பட ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அள்ளித்தந்த வானம் படத்தில் தனியார் தொலைக்காட்சி உரிமையாளராக தோன்றியிருப்பார் முரளி மோகன். இதில் தமிழை இந்த தொலைக்காட்சிகள் எப்படி கொலை செய்கின்றன என்ற காட்சியில் இவரும் விவேக்கும் நடித்திருப்பார்கள். 'ஆங்கிலத்துக்கு கட் அவுட். தமிழுக்கு கெட் அவுட்டா..' என்று விவேக் வசனம் பேசுவது இத்திரைப்படத்தில்தான்.

முரளிமோகன் தோன்றிய ஹார்லிக்ஸ் விளம்பரம் மிகவும் பிரபலமானது. இதனால், இவரை ஹார்லிக்ஸ் மாமா என்றும் அனைவரும் அழைக்கின்றனர்.

இவரது மரணம் தொடர்பில்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X