2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

கைதியுடன் பாலியல் உறவுகொண்ட சிறைஅதிகாரி நெருக்கடியில்

Kogilavani   / 2010 நவம்பர் 22 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறைச்சாலை ஆசிரியை ஒருவர், கொலைக்குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வரும் கைதியுடன் பாலியல் தொடர்புக்கொண்டுள்ளதுடன், அந்நபருடன் பாலியல் உறவில் ஈடுபடும் காட்சியை வீடியோவில் பதிவுசெய்ததினால் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

உயர் பாதுகாப்புமிக்க சிறையில் உத்தியோகஸ்தர்களுக்கான அறையில் வான் டீ வெல்ட்  எனும் 59 வயதான இப் பெண் கொலைக்குற்றவாளியான ரிச்சர்ட் வயது 29 என்பவருடன் இவ்வாறு பாலியலில் ஈடுப்பட்டுள்ளார்.

17 நிமிடங்கள் கொண்ட  அந்த வீடியோவை அதிகாரிகள் கண்டுபிடித்ததுடன்,  சிறைச்சாலை ஆசிரியை மேற்படி கைதிக்கு எழுதிய 100 இற்கும் மேற்பட்ட காதல் கடிதங்களையும் கைதியின் கூண்டிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

வான் டி வெல்ட் அவர்களது உறவு குறித்து ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அவர் ரேய் ஹில் சிறைச்சாலையிலிருந்து கடந்த 03 ஆம் திகதி கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டார்.

மேற்படி வீடியோவில் அவர் லெதர் மேலங்கி, தோங்,  மற்றும் ஸ்டொக்கிங் என்பன அணிந்த நிலையில் பலவிதங்களில் குறித்த கொலை குற்றவாளியுடன் பாலியலில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த கொலை குற்றவாளி தெற்கு லண்டனில் அச்சமூட்டும் குழுவொன்றின் தலைவராக இருந்தவர். கொலை குற்றச்சாட்டொன்றுக்காக கடந்த 2002 ஆம் ஆண்டு அவருக்கு 13 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
 
சிறை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் 'அப்பெண் மிகத் துணிச்சலானவளாக அல்லது முழு முட்டாளாக இருக்கவேண்டும். அக்கைதி அங்கிருந்து இலகுவாக தப்பியோடியிருக்க முடியும்' எனக் கூறியுள்ளார்.
 


  Comments - 0

  • xlnxlntgson Tuesday, 23 November 2010 10:13 PM

    செய்வது தான் செய்கிறீர்கள், ஏன் வீடியோ பண்ணி வைக்கின்றீர்கள்? ஆதாரத்துக்கா? செய்வது என்னோமோ நல்ல செயல் மாதிரி! பட்டுக்கொண்டு தவியுங்கள்.

    Reply : 0       0

    arafath Saturday, 27 November 2010 08:00 PM

    இந்த பூமியில் நடக்கின்ற அநியாயங்களை கண்டார்,மனிதன் செய்கின்ற அநியாயங்கள், விபச்சாரங்கள்,சொத்துகளை அபகரிக்கும் களவுகள், கொலைகள், போன்ற அனைத்து அக்கிரமங்களையும் கண் முன்னால் கண்ட போது அதை அனைத்தையும் சீர்திருத்துவற்கு அவர் ஒரேயோரு வழிமுறையையே கையாண்டார்கள், அன்னார் கையாண்ட ஒரே வழிமுறை.....

    Reply : 0       0

    xlntgson Saturday, 27 November 2010 09:12 PM

    ஒருவர் இன்னொருவர் பெயரில் செய்யும் தில்லுமுல்லு பற்றி எழுதினேன் அதைக்காணவில்லை. ஆனால் வகுப்புவாதத்தை தூண்டும் கருத்து மின்னஞ்சல் முகவரியோடு! தமிழ் மிரருக்கு பக்கவாதம் பிடித்து கொண்டது போல் தெரிகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .