2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பூதத்தை நேரில் கண்ட இளைஞன்

Kogilavani   / 2014 ஜூன் 27 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


இளைஞர் ஒருவர் சீனாவின் மலைப் பகுதியொன்றில் பூதத்தை நேரில் கண்டு அதனை புகைப்படமெடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த பெயர் வெளியிடாத இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் பெய்ஜிங்கின் வடக்கே ஹுவாரியவ் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு அவர், தலையில் முடி இல்லாத, மாமிச நிறத்திலான மற்றும் நீண்ட காதுகள் கொண்ட உருவமொன்றை கண்டுள்ளதுடன் அதனை புகைப்படங்களாக எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், தான் கண்டது பூதம்தான் என அவர் தெரிவித்தார்.

இளைஞர் வெளியிட்ட புகைப்படத்தில் பதிவாகியிருந்த உருவம் பார்ப்பதற்கு லார்டு ஆப் தி ரிங்ஸ் படத்தில் வரும் கொல்லம் என்ற கதாபாத்திரத்தை போன்று இருந்தது. மேலும்,அந்த உருவம் தனது இடுப்பில் இலைகளால் ஆன ஆடையை அணிந்து இருந்தது.

இந்த வினோத உருவத்தைப் பார்த்த அந்த இளைஞர் உடனடியாக சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அதனை தனது சமூக வலைதளப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

'நான் காலை கடன் கழிப்பதற்காக சற்று தொலைவான பகுதிக்கு சென்றேன். திடீரென ஒரு உருவத்தை பார்த்தேன். அதனை சில புகைப்படங்கள் எடுத்தேன். ஆனால், எனக்கு இப்பொழுது பயமாக இருக்கிறது' என அவ் இளைஞன் தெரிவித்துள்ளார்.

இளைஞரின் புகைப்படத்தைப் பார்த்த அவரது நண்பர்கள் சிலர் அது உண்மையிலேயே பூதம்தான் என நம்பினர். மேலும், சிலர் இல்லையில்லை அது சித்தரிக்கப்பட்டது, பொய், புரளி என வாதிட்டனர். இப்படியாக, இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்ப இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பதில் கிடைத்துள்ளது.

அதாவது விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படத்தின் நடிகர் ஒருவர் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் பூதமாக இருப்பது அவர்தானாம். சம்பந்தப்பட்ட மலையில் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. படப்பிடிப்பின் இடையே இயற்கை உபாதையைக் கழிக்க மறைவிடத்தில் ஒதுங்கிய அவரைத்தான் பூதம் எனக் கருதி இளைஞர் புகைப்படம் எடுத்துள்ளார்.

இணையத்தில் அவரது புகைப்படத்தை பூதம் எனக் கூறி அந்த இளைஞர் வெளியிட்டதால் முதலில் அமைதியாக இருந்ததாகவும், பின்னர் குழப்பத்தைத் தவிர்க்க இந்த விளக்கத்தை அளித்துள்ளதாகவும் அந்த நடிகர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X