2025 மே 12, திங்கட்கிழமை

ஆண் மீது பெண் வல்லுறவு: அதிர்ச்சியில் ஆண்

Gavitha   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆணொருவரை வல்லுறவுக்குட்படுத்திய பெண்ணை அமெரிக்க பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா வொஷிங்டன், சீட்டில் நகரத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே இக்குற்றத்தை புரிந்துள்ளார்.

இவர், 31 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஆணின் கைகளை கட்டிபோட்டுவிட்டு, இக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆழ்ந்த நித்திரையில் இருந்த குறித்த நபர், அதிகாலை 2 மணியளவில் திடீரென கண் விழித்துப் பார்த்தபோது, தான் பெண்ணொருவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதை உணர்ந்துள்ளார்.

கடுங்கோபமடைந்த அந்நபர், அருகிலிருந்த பெண்ணை அடித்து பலவந்தமாக வெளியே துரத்தியதுடன், தான் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டையடுத்து, குறித்த பெண்ணை கைதுசெய்த பொலிஸார் அவரை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தினர்.  

தான் பைபோலார் எனும் மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பெண் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • mathivanan Monday, 15 September 2014 04:22 PM

    இது என்ன கொடுமையா இது??????????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X