2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

கார் வாங்குவதற்காக 4 தொன் நிறையில் நாணயங்களை சேகரித்த நபர்

Kogilavani   / 2015 ஜூன் 04 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரொன்றை வாங்குவதற்காக நபரொருவர், இலங்கை ரூபாய் 13,955,400 பெறுமதியான நாணயங்களை சேகரித்த சம்பவம் பலரை வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

சீனா, லயோனிங் மாகாணத்தை சேந்ரந்த நபரொருவரே இவ்வாறு நாணயங்களை சேகரித்துள்ளார்.

இந்நாணயங்களை லொறியில் ஏற்றுவதற்கு ஒரு மணித்தியாலம் சென்றுள்ளதுடன் 10 வேலையாளர்கள் தேவைப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனா யுவானான இந்நாணய குற்றிகளை கணக்கிடுவதற்கு வங்கியலாளர்கள்  நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இவரிடம் 4 தொன் நிறையுடைய நாணயக்குற்றிகள் காணப்படுவதால் அதனை பெற்று வங்கியில் வைப்பிலிடுவது சிரமமென்பதால் விநியோகஸ்தர்களும் இவரிடமிருந்து பணத்தை பெறுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .