2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்கா,சுவிஸ் நாடு தூதுவர்களை கஜேந்திரகுமார் சந்தித்தார்

R.Tharaniya   / 2025 மே 20 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் அவர்களின் தூதரகங்களில் இன்று செவ்வாய்க்கிழமை (20)   சந்திப்பு இடம்பெற்றது.

தூதுவர்களுடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், உதயன் பத்திரிகை உரிமையாளர் ஈ.சரவணபவான், சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ஆகியோர் முதலில் சுவிஸ் நாட்டு தூதரை சந்தித்தனர்

இதனை தொடர்ந்து பின்பு அமெரிக்க தூதரகத்தில் அந்த நாட்டு தூதுவரை சந்தித்து தமிழ் மக்களுக்கு  சமஸ்டியிலான நிரந்தர தீர்வு மற்றும் வடக்கில் தற்போது அரசாங்கம் தமிழ் மக்களின் காணி அபகரிப்பை நிறுத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தனர். 

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X