2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

இரட்டைக் கொலை: 5 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியலில்

Freelancer   / 2022 ஜூன் 19 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார்  நொச்சிக்குளம்  கிராமத்தில்  கடந்த  10  ஆம் திகதி    இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில்  குடும்பஸ்தர்கள் இருவர்  படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய   சந்தேக நபர்களில் 5 பேர் நேற்று  (18) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

சரணடைந்த குறித்த 5 சந்தேக நபர் களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி  காலை  மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த வாள்வெட்டு சம்பவத்தில் இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன்  இருவர் படுகாயமடைந்தனர்.

குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய  யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் என்ற  சகோதரர்கள்  இருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .