2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

உணவக உரிமையாளருக்கு ரூ 2 இலட்சம் தண்டம்

Janu   / 2024 மார்ச் 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது சுகாதார பரிசோதகர்களால் நாவாந்துறை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது , பழுதடைந்த உணவுகள் , இறைச்சி கறிகள் என்பன மீட்கப்பட்டதுடன் , சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலான சூழல்கள் அவதானிக்கப்பட்டுள்ளது .

அதனையடுத்து குறித்த  உரிமையாளருக்கு எதிராக , பொது சுகாதார பரிசோதகர்களால் , 20 குற்றச்சாட்டுக்களின் கீழ்   யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

அதன்போது  , குற்றச்சாட்டுக்களை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து,  ஒவ்வொரு குற்றத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் , 20 குற்றச்சாட்டுக்களுக்கு 2 இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

எம். றொசாந்த்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X