Janu / 2026 மார்ச் 16 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலயத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாக சென்று, அங்கு நிலவும் குறைபாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நீண்டகாலத் தேவைகள் குறித்துக் கேட்டறிந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, பாடசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் செயல்பாடுகள் சார்ந்த பின்வரும் குறைபாடுகள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன:
குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை விரிவாகக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இவை தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, தீர்வுகளைப் பெற்றுத்தரத் தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
விஜயரத்தினம் சரவணன்


11 minute ago
26 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
58 minute ago
1 hours ago