R.Tharaniya / 2025 நவம்பர் 26 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பளை பகுதியில் புதன்கிழமை (26) அன்று காலை 9.30 மணியளவில் பளை பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் அருகாமையில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு மிக சிறப்பாக இடம்பெற்றது
இவ் கௌரவிப்பு நிகழ்வு ஆரம்பத்தில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மங்கள வார்த்தை இசையுடன் அழைத்து வரவேற்கப்பட்டு மாவீரர் பெற்றோரால் நினைவு சுடர் ஏற்றப்பட்டது அதை தொடர்ந்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
இவ் கௌரவிப்பு நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களும் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் அவர்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவீரர் பெற்றோர் மாவீரர் உரித்துடையோர் என பலரும் கலந்து கொண்டனர்.




27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago