Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
உடுப்பிட்டி , இமையாணன் மேற்கில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த 35 பொது அமைப்புக்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த மே மாதம் 5ம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில் வழக்காளிகளாக பொது அமைப்புகள் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.
புதன்கிழமை (18) விசாரணையின் போது மதுபானசாலை அமைப்பதற்கான தன் நிலையை குறித்த மதுபான சாலை உரிமையாளர் நீதிமன்றத்தில் விளக்கினார். உரிமையாளர் சார்பாக மற்றொரு சாட்சியம் அடுத்த தவணையின் போது அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் விசாரணையை நீதவான் ஒத்தி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
28 minute ago
36 minute ago
45 minute ago