2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

யாழில். பட்டப்பகலில் சங்கிலி அறுத்த கொள்ளையர்கள்

Editorial   / 2025 ஒக்டோபர் 19 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில்   சனிக்கிழமை (18) மாலை பெண்ணொருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் , பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு , மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளனர். 

குறித்த சம்பவம் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் ,  கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிகள் அடிப்படையில் , பொலிஸார் வழிப்பறி கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளதுடன் , கொள்ளையர்கள் , கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் அடையாளம் கண்டுள்ளனர். 

அதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .