2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் செல்வம்

Janu   / 2023 டிசெம்பர் 19 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப் பட்டு இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வரும் மக்களை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திங்கட்கிழமை (18) மாலை பார்வையிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 632 குடும்பங்களைச் சேர்ந்த 2245 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது 4 தற்காலிக நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நலன் புரி  நிலையங்களுக்குச் சென்று மக்களை பார்வையிட்டு மக்களின் தேவைகளை கேட்டறிந்து மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்.றொசேரியன் லெம்பேட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X