Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 03 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
கல்முனை பிரதேசத்தில் போதைப்பொருள் மாத்திரைகளையும் கஞ்சாவையும் வைத்திருந்த 21 வயது இளைஞனை, இன்று (03) காலை கைது செய்துள்ளதாக, கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.அருணன் தலைமையிலான போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், குறித்த இளைஞனைக் கைதுசெய்துள்ளனர்.
கல்முனை, மதுரங்கா வீதியில் வைத்து குறித் இளைஞனை வழிமறித்துச் சோதனை செய்த போது, அவரிடம் இருந்து 17 போதைப்பொருள் மாத்திரைகளும் கஞ்சாவும் மீட்கப்பட்டடதையடுத்து, அவரைக் கைது செய்துள்ளதாக, கல்முனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்பலா பிரதேசத்தில் தலா 40 மில்லிக்கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவர், நேற்று முன்தினம் (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
53 minute ago
55 minute ago
1 hours ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
55 minute ago
1 hours ago
18 Sep 2025