Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியின் மாளிகைக்காடு பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெபெற்ற பாரிய வாகன விபத்தொன்றில் 12இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார், பிக்கப் வாகனம் போன்றன சேதமடைந்துள்ளன.
கல்முனையிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த கென்டர் ரக லொறியொன்று பாதையை விட்டு விலகியதால் வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் மேற்படி வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இருப்பினும் விபத்து நடைபெறும் போது பொதுமக்கள் கடைகளுள் இருந்ததால் உயிரிழப்புக்ள தவிர்க்கப்பட்ட போதிலும் ஒரு சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
faththa Thursday, 29 September 2011 09:19 PM
ரோடு விரிவாக்க பொதுமகன் இடம் கொடுப்பானா ?????????????????
Reply : 0 0
sopnam Friday, 30 September 2011 01:22 AM
சம்பவம் இடம்பெற்ற இடத்தின் அகலத்தைப்பற்றி சகோதரர் Faththha இற்கு தெரியுமோ.... தெரியாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026