Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)
சர்வதேச சிறுவர், முதியோர் தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட துறைசார்ந்த முதியோர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக பிரதேசத்திற்குட்பட்ட 10 துறைசார்ந்த முதியோர்கள் கௌரவிக்கப்பட்டு பொருட்களும் பாராட்டு சான்றிதள்களும் வழங்கப்பட்டதுடன் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.டி.அபுல்ஹஸன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை ஹற்றன் நெஷனல் வங்கி முகாமையாளர் எ.எல்.அன்வர்டீன் உட்பட அதீதிகளாக பிரதேச செயலகத்தின் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .