A.P.Mathan / 2011 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
	.jpg)
	இன்றைய பலன்கள் (19.09.2011)
	
	இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 02ஆம் நாள் (19.09.2011) திங்கட்கிழமை. அமிர்த யோகமும் ஸப்தமி திதியும் ரோகிணி இன்று இரவு மாலை 9.24 மணிவரை, பின்பு மிருகசீரிடம்.
	இராகு காலம் : காலை 7.30 முதல் 9.00 மணி வரை
	எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை, இரவு 3.00 முதல் 4.30 மணிவரை
	
	தேய் பிறை சுபமுகூர்த்த தினம்
	நல்ல நேரம் : காலை 6.15 முதல் 07.15 மணிவரை, மாலை 4.45 முதல் 5.45 மணிவரை
	
	
	மேடம்
	பயணங்கள் பயணிப்பதால் அதிர்ஷ்டம் ஏற்படும், இசையில் ஈர்ப்பு அதிகரித்தல், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
	அஸ்வினி: லாபம்
	பரணி: ஆசீர்வாதம்
	கிருத்திகை 1ஆம் பாதம்: அனுகூலம்
	
	
	இடபம்
	உண்ணும் உணவில் விருப்பமின்மை, தொழில் திட்டங்களில் தடைகள் ஏற்படும், புதிய காரியங்கள் பின்தள்ளப்படும்.
	கிருத்திகை 2, 3, 4: தோல்வி
	ரோகிணி: தடை
	மிருகசீரிடம் 1, 2: வெறுப்பு
	
	
	மிதுனம்
	வெண்மையான ஆடைகளை அணிதல், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுதல், அரச வேலைவாய்ப்புக்கள் கிடைத்தல்.
	மிருகசீரிடம் 2, 3: சுபம்
	திருவாதிரை: உதவி
	புனர்பூசம்: சந்தோஷம்
	
	
	கடகம்
	அழகிய ஆச்சரியமான பொருள் காணல், புண்ணிய ஸ்தலங்கள் செல்வதனால் மனஆறுதல், மனதில் சோர்வுகள் ஏற்படும்.
	புனர்பூசம்: விசித்திரம்
	பூசம்: பயம்
	ஆயில்யம்: வழிபாடுகள்
	
	
	சிம்மம்
	விநோதங்களில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை, மனதால் கஷ்டம், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும்.
	மகம்: மகிழ்ச்சி
	பூரம்: கவலை
	உத்திரம் 1ஆம் பாதம்: நிதானம்
	
	
	கன்னி
	பெரியார்களின் அன்பும் அக்கறையும் கிடைக்கும், தனவரவு ஏற்படும், மனதில் பயம் உணர்வு தோன்றுதல்.
	உத்திரம் 2, 3, 4: வரவு
	அஸ்தம்: நம்பிக்கை
	சித்திரை 1, 2ஆம் பாதம்: சோர்வு
	
	
	
	துலாம்
	நிம்மதியான உறக்கம் இனிதே கிடைக்கும், அரசாங்க உதவிகள் தேடிவருதல், குடும்ப உறவினர்களின் வருகையினால் உற்சாகம்.
	சித்திரை 3, 4ஆம் பாதம்: வாய்ப்பு
	சுவாதி: புத்துணர்ச்சி
	விசாகம் 1, 2, 3: நிம்மதி
	
	
	விருட்சிகம்
	ஆன்மீக தியானங்கள் வழிபாடுகள் மனஅமைதி தரும், தொலைந்த பொருள் கிடைத்தல், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.
	விசாகம் 4: குழப்பம்
	அனுசம்: இறை தியானம்
	கேட்டை: சஞ்சலம்
	
	
	தனுசு
	இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும், தூர பிரயாணங்களினால் அதிக லாபம் ஏற்படும், சில இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
	மூலம்: அனுகூலம்
	பூராடம்: மாற்றம்
	உத்திராடம் 1ஆம் பாதம்: மனஆறுதல்
	
	
	மகரம்
	உயர் அதிகாரிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும், புதிய வேலைப் பணிகளை செயல்படுத்தல், பணவரவு ஏற்படும்.
	உத்திராடம் 2, 3, 4: உயர்வு
	திருவோணம்: லாபம்
	அவிட்டம் 1, 2: வாக்குவாதம்
	
	
	கும்பம்
	தூய்மையான ஆடை அணியலாம், குடும்பத்தில் சொந்த பந்தங்களின் வருகை, மனதில் கவலைகள் மறைந்து உற்சாகம் கிடைக்கும்.
	அவிட்டம் 3, 4: நன்மை
	சதயம்: மகிழ்ச்சி
	பூரட்டாதி 1, 2, 3: சுபம்
	
	
	மீனம்
	பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும், விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல்.
	பூரட்டாதி 4: ஆச்சரியம்
	உத்திரட்டாதி: சங்கடம்
	ரேவதி: துன்பம்
	 
7 hours ago
9 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
30 Oct 2025