Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனில் தலைமறைவாக வசித்து வந்த பாகிஸ்தானின் அரசியல்வாதியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இம்ரான் பாரூக் என்ற அரசியல்வாதியே வடக்கு பிரிட்டனிலுள்ள அவரது வீட்டிற்கு வெளியே கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அவரது கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் பாரூக் பாகிஸ்தானின் முத்தாஹிடா குவாமி அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஆவார்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இடபெற்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
50 வயதான இவர் பல கத்திக் குத்து காயங்களுக்குள்ளான நிலையிலும் தலையில் காயம் ஏற்பட்ட நிலையிலும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய கராச்சியிலுள்ள இம்ரான் பாரூக்கின் இல்லத்தில் நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கூடியுள்ளனர்.
19 minute ago
1 hours ago
1 hours ago
xlntgson Friday, 17 September 2010 09:28 PM
கவலைக்குரிய விடயம் முஸ்லிம்களுக்குள்ளேயே சகோதரயுத்தம் அவசியமானதா? மனிதர்கள் தங்களது கோப தாபங்களை கட்டுப்படுத்திக்கொள்ள இயலாவிடில் எவ்வினமும் எதிரிகளில் ஆரம்பித்து சொந்தத்தில் முடியும் என்பது அறிந்த விடயம். யாரும் பகையை வளர்க்க கூடாது எதிரிகள் தூபமிட்டாலும் கூட. பழையனவற்றை மறந்து வாழ.முத்தஹிதா கௌமி மூவ்மென்ட், மொஹாசிர் கௌமி மூவ்மேன்ட்டில் இருந்து பிரிந்ததா, அல்லது இரண்டும் ஒன்றா? யாரேனும் தெரிந்திருந்தால் சொல்லுங்கள். பிரிவினையின் போது இந்தியாவில் இருந்து போனவர்களை கொண்ட ஓர் அரசியல் இயக்கம், MQM
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
1 hours ago