2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

சைக்கிளுக்கு மவுசு அதிகரிப்பு

Editorial   / 2026 மார்ச் 22 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, தற்போது மின்சார வாகனங்கள் (Electric Vehicles) மற்றும் துவிச்சக்கர வண்டிகளுக்கு (Bicycles) பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தைத் தகவல்களின்படி, முன்னெப்போதையும் விட தற்போது துவிச்சக்கர வண்டிகளின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. அத்துடன், எரிபொருள் குறைவாகப் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களின் பாவனையும் அதிகரித்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பொதுமக்கள் தமது தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு, பொதுப் போக்குவரத்துச் சேவைகளை   அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .