Super User / 2011 நவம்பர் 25 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் பிணை மீதான விசாரணை திங்கட்கிழமை வரை டில்லி உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிசெம்பர் முதலாம் திகதியே இம்மனு விசாரிக்கப்படவிருந்தது.
எனினும் இவ்வழக்கில் மேலும் 5 பேருக்கு இந்திய உச்சநீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில் தமது மனுக்களை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத் குமார் உட்பட 6 பேர் கோரினர்.
இதன்படி இப்பிணை மனுக்கள் மீதான விசாரணை டில்லி உயர் நீதிமன்றத்தால் இன்று வெள்ளிக்கிழமை இவ்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும் திங்கட்கிழமை வரை அவ்விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
10 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
29 minute ago
38 minute ago