Editorial / 2017 ஜூலை 13 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 3 மாதங்களில் அரிசி விலை அதிகரிக்கப்படமாட்டாது என்று, அரசி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஹேமக பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது குறித்து, அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“எவ்வித தடங்களும் இல்லாமல், அரிசி வழங்குவதற்கு தேவையான தொகை போதுமானளவு உள்ளது.
“தற்போது வரையில், அரிசி விலை அதிகரிக்கப்படவில்லை. எதிர்வரும் 3 மாதங்கள் வரை, தற்போதைய அரிசியின் மொத்த விலையை பராமரிக்க கூடியாத இருக்கும். அதில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாது.
“இதேவேளை, வாழ்க்கை செலவு தொடர்பான செயற்குழுவுடன் நேற்று முன்தினம் (11) கலந்துரையாடலொன்றை மேற்கொண்டோம்.
“இதன்போது, தற்போதுள்ள அரிசி ஒரு கிலோ கிராமுக்கு கிடைக்கும் 5 ரூபாயை சுங்க வரி திருத்தத்துக்கு அல்லாமல் வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் அறிவித்துள்ளோம்” என்றார்.
31 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
5 hours ago