Editorial / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா – மின்னா பெயாலோன் நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரினால் இன்று (18) பகல் 12 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வயோதிப பெண், ஒரு பிள்ளையின் தாயாரெனவும், 65 வயதுடையவரெனவும் தெரிவித்தப் பொலிஸார், இவர் காணாமல் போயுள்ளதாக, இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
5 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
3 hours ago