2025 ஜூலை 02, புதன்கிழமை

நாடளுமன்ற முதல் அமர்வில் பொன்சேகா கலந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை

Super User   / 2010 ஏப்ரல் 21 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை நடைபெறவுள்ள நாடளுமன்றத்தின் முதல் அமர்வில் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொள்வது தொடர்பாக இராணுவத்திற்கும் நாடளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதேவேளை ஜெனரல் பொன்சேகா நாடளுமன்றத்தின் முதல் அமர்வில்  கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு  நாடளுமன்ற செயலாளர் நாயகம் ஜனநாய தேசிய முன்னணியின் செயலாளர் விஜித ஹேரத் மற்றும் ஜெனரல் பொன்சேகாவின் சட்டத்தரணி சுனில் வட்டகல ஆகியோரிடம் கடிதம் மூலம் வேண்டிக்கொண்டிருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .