2025 ஜூலை 12, சனிக்கிழமை

புலிகளின் பொலிஸ் சீருடையால் காவல் படைக்கு சிக்கல்

Editorial   / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

 

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட “காவல் படை” தொடர்பில் மாநகர ஆணையாளரிடம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவரிடம் சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர். 

“காவலாளி” சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் “காவல் படை” என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக அறியமுடிகிறது. 

அத்துடன், தமிழீழ விடுதலை புலிகளின்  காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அழைத்துள்ளனர்.

அதேவேளை, குறித்த விசாரணைகள் தொடர்பில் பொலிஸாரின் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

யாழ்ப்பாணம் மாநகரின் அதிகாரத்துக்கு உட்பட்ட பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும், வெற்றிலை துப்பினால் 2ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக  அறிவித்துள்ள மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .