2025 ஜூலை 12, சனிக்கிழமை

பழைய நாடாளுமன்றத்தை பார்வையிட சந்தர்ப்பம்

Editorial   / 2020 மார்ச் 11 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழைய நாடாளுமன்றமான, தற்போதைய ஜனாதிபதி செயலகத்தை எதிர்வரும் 15 திகதியில் இருந்து  வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) என்று குறிப்பிட்டு 011-2441685 என்ற தொலைநகல் இலக்கத்தை தொடர்புக்கொண்டு அல்லது 011-2354354 என்ற இலக்கத்தை அழைத்து இதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.

பழைய நாடாளுமன்றமானது ஐந்து பழமையான கட்டடக்கலை பாணிகளில் ஒன்றான ´அயோனியன் முறைமைக்கமைய 82 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் வெளிப்புற தோற்றம், ஏதென்ஸின் அக்ரோபோலிஸில் என்ற கிரேக்க தெய்வமான ´அதீனா´ வுக்காக கட்டப்பட்ட பிரதான மண்டபத்தை ஒத்ததாக காணப்படுகின்றது.

இதனை 1930 ஆண்டு ஜனவரி 29, திகதி ஆளுநர் சேர் ஹெர்பர்ட் ஸ்டான்லியால் என்பவர் சட்டமன்றமாக நிறுவினார்.

அரசியலமைப்பின் சீர்திருத்தங்கள் மற்றும் சட்டமன்றத்தில் அடுத்தடுத்த திருத்தங்களுடன், இது மாநில பேரவையாகவும் (1931-1947), பிரதிநிதிகள் சபையாகவும் (1947-1972), தேசிய மாநில பேரவையாகவும் (1972-1978) மற்றும் இலங்கை  நாடாளுமன்றமாகவும் (1978-1982) கருதப்பட்டது.

பின்னர், புதிய நாடாளுமன்றம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பின்னர்,  1983 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலகமாக பெயரிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .