Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை, அப்பாவித் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே, பொங்குத் தமிழ் நிகழ்வு என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.
யாழ் பல்கலைகழகத்தில், நாட்டைத் பிளவுபடுத்தும் இதுபோன்ற தீவிரவாத செயற்பாடுகளை நடத்துவதற்கு அரசாங்கம் எவ்வாறு அனுமதியளித்தது எனவும் அந்த அணி கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டப் பின்னர், அவர்களது கொள்கையான தனி தமிழீழக் கோரிக்கையைப் பாதுகாக்கும் பிரிவினைவாதிகளின் நிகழ்வே பொங்குத் தமிழ் நிகழ்வு என கூறிய அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர, இந்நிகழ்வு யாழ் பல்கலைகழகத்தின் உப பீடாதிபதியின் தலைமையில், நடைபெற்றதாகவும் கூறினார்.
பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இன்று(19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
33 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
35 minute ago
1 hours ago