Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தொடர்பாக நியமிக்கப்பட்ட ஒழுக்காற்றுக் குழுவின் இறுதி அறிக்கை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடம் இன்று மாலை கையளிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் 'தமிழ்மிரர்' இணையத்தளத்திற்கு தெரிவித்தன.
முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா, களனி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டியதை விசாரிப்பதற்காக ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவினால் ஒழுக்காற்று குழு நியமிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோரிடமிருந்து பெற்ற அறிக்கை மூலமே இக்குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசேகரவை தலைவராகக் கொண்ட இக்குழுவில் ஓய்வு பெற்ற அரச அதிகாரி மஹிந்த சமரசேகர மற்றும் சட்டத்தரணி என்.எம்.சஹீட் ஆகியோர் உறுப்பினர்களாவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago