Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.வி. சன் ஸீ கப்பலில் வந்த தமிழ் அகதிகள் சிலருக்கு பயங்கரவாதத் தொடர்புகள் இருக்கலாம் எனக் குற்றம் சுமத்துவதை கனேடிய அரசாங்கம் நிறுத்திவிட்டு இது தொடர்பான ஆதாரங்களை முன்வைக்க வேண்டுமென கனேடிய தமிழ் காங்கிரஸ் கூறியுள்ளது.
கப்பலில் வந்தவர்கள் அனைவரிடமும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளவர்களா என்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேஸன் கென்னி கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே டேவிட் பூபாளப்பிள்ளை மேற்படி கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனேடிய தமிழ்க் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாளப்பிள்ளை இது தொடர்பாக கனேடிய ஊடகமொன்றுக்கு கூறுகையில்,
'இது தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். எவருக்கேனும் எதிராக ஆதாரங்கள் இருந்தால் எமது சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு அந்நபர்களை எமது சட்டத்தின் முன் நிறுத்தட்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
42 minute ago
58 minute ago
1 hours ago