Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி வீதியின் கொளுமடம் சந்தியில் மஞ்சட் கடவைக்கு அருகாமையில் பாதை கடந்து கொண்டிருந்த 58 வயதான நபர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த வாகனம் மொரட்டுவையிலிருந்து கொழும்புக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
காயத்திற்குள்ளான மேற்படி நபர் களுபோவில வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார். குறித்த வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கல்கிஸை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago