Super User / 2011 ஜனவரி 14 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(டியென் சில்வா)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களின் முதல் தொகுதி இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பை வந்தடைந்துள்ளது என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.
இந்த பொருட்களை விமான நிலையத்தில் வைத்து இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளார்.
உணவு, குடிநீர், நீர் சுத்திகரிக்கும் மாத்திரைகள் மற்றும் பாய்கள் அடங்கிய 25 மெட்ரிக் தொன் நிவாரண பொருட்கள் இந்திய விமான படை விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் நிவாரண பொருட்களின் இரண்டாம் தொகுதி திங்கட்கிழமை இலங்கையை வந்து சேரும் என இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரேந்தர் எஸ். யாதவ் தெரிவித்தார்.
12 minute ago
17 minute ago
57 minute ago
1 hours ago
siddeek Friday, 14 January 2011 07:44 PM
குட் வொர்க்
Reply : 0 0
xlntgson Friday, 14 January 2011 09:10 PM
கத்திரிக்காய் கரப்பான் அது இல்லாட்டியும் பறப்பான்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
57 minute ago
1 hours ago