Suganthini Ratnam / 2011 ஜனவரி 26 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறை அதிகாரியை கைதுசெய்யுமாறு கோரி அநுராதபுரம் சிறைச்சாலைக் கைதிகள் இன்று புதன்கிழமை மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது கைதியொருவரை சுட்டுக்கொன்றதாக கூறப்படும் சிறை அதிகாரியை கைதுசெய்யுமாறு கோரி அநுராதபுரம் சிறைக்கைதிகள் மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கைதிகள் எந்த ஆகாரமுமின்றி கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதியொருவர் பலியாகியுள்ளதுடன், 25 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. (DM)
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026