Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 04 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அகதியொருவரை வாகனத்தால் மோதி விட்டு தப்பிச்சென்றுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 31 வயதான ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையான நபரொருவருக்கு 8 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டான்டெனொங் எனும் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையில்; ஜரட் சுவான் என்பவரின் கார் மோதியதில் திருவடிவேல் ஸ்ரீஸ்காந்தராஜா என்பவர் பலியானார்.
குறித்த இலங்கை அகதி 27 மீற்றருக்கு அப்பால் தூக்கி எறியப்பட்டு அந்த இடத்திலேயே பலியானார். இவர் 6 மாதங்களுக்கு முன்னரே அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர் ஆவார்.
ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையான ஜரட் சுவான் விரைவாக காரை செலுத்தி வந்து காரை நிறுத்துவதற்கு தவறியதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
8 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜராட் சுவான் குறைந்தபட்சம் 6 வருடகாலமாவது சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி நேரிடுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. (DM)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
6 hours ago