Suganthini Ratnam / 2011 ஜனவரி 14 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சுமார் 1,055,185 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 பேர் காயமடைந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளனர்.
361,143 இடம்பெயர்ந்த மக்கள் தங்குவதற்காகவும் இவர்களுக்கான உலர் உணவுப் பொருள்கள் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குவதற்காகவும் 594 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டது.
வெள்ளத்தினால் 2890 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 16,029 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
8 hours ago
8 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
20 Mar 2026